நேர்கொண்ட பார்வை
தமிழ்
ஆங்கிலம்
க்ரைம்,
ட்ராமா
நேர்கொண்ட பார்வை - அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டாரியாங் மற்றும் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஆதிக், வெங்கி மற்றும் விஷ்வா ஆகிய நண்பர்கள் நடத்தும் இரவு விருந்தில் கலந்து கொண்ட மீரா, பாத்திமா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய 3 பெண்களை சுற்றி நடக்கிறது. அந்த விருந்தில் ஆதிக், மீராவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் மீரா தாக்கியதில் அவன் படுகாயம் அடைகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக், மீரா மற்றும் அவள் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து அதில் அவர்களை விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறான். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது டிஃபென்ஸ் லாயர் பரத் இந்த வழக்கை ஏற்கிறார். இந்த பெண்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பரத் களைவாரா? உண்மை வெளிவந்து அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?